Bharathiyin Ninnai Saranadainthen Kannamma lyrics

பாரதியின் நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா  பாடல் வரிகள் (இசைஞானியின் குரலில்)


நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கென்று

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று




Comments

  1. sangar takuar - என்ற ஆங்கிலர் இசையமைக்கும் மகாகவி பாரதியின் ஆசை முகம் மறந்து போச்சே பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்....http://www.youtube.com/watch?v=LYUgRowOfQs
      அற்புதம் நன்றி :)

      Delete

Post a Comment

Popular posts from this blog

கிருஷ்ணரின் வார்த்தைகள் ♥ :)